காளிப்பாட்டு

காளிப்பாட்டு

bookmark

யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீநி றைந்தாய், 
தீது நன்மை யெல்லாம் - காளி! தெய்வ லீலை யன்றோ? 
பூத மைந்தும் ஆனாய் - காளி! பொறிக ளைந்தும் ஆனாய் 
போத மாகி நின்றாய் - காளி! பொறியை விஞ்சி நின்றாய். 

இன்பமாகி விட்டாய் - காளி! என்னுளே புகுந்தாய்? 
பின்பு நின்னை யல்லால் - காளி! பிறிது நானும் உண்டோ? 
அன்ப ளித்து விட்டாய் - காளி! ஆண்மை தந்துவிட்டாய், 
துன்பம் நீக்கி விட்டாய் - காளி! தொல்லை போக்கிவிட்டாய்.