சக்திக்குஆத்மசமர்ப்பணம்

சக்திக்குஆத்மசமர்ப்பணம்

bookmark

ராகம் - பூபாளம் தாளம் - சதுஸ்ர ஏகம் 

கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது 
சாதனைகள் யாவினையுங் கூடும் - கையைச் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும். 

கண்ணைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது 
சக்தி வழியதனைக் காணும் - கண்ணைச் 
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது 
சத்தியமும் நல்லருளும் பூணும். 

செவி, சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ 
சக்தி சொலும் மொழியது கேட்கும் - செவி 
சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்திதிருப் பாடலினை வேட்கும். 

வாய், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ 
சக்தி புகழினையது முழங்கும் - வாய் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்தி நெறி யாவினையும் வழங்கும். 

சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும் - அதச் 
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ 
சக்தி தங்ருச் சுவையினை நுகரும் - சிவ 
சக்தி தாக்கே எமது நாக்கு. 

மெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ 
சக்தி தருந் திறனதி லேரும் - மெய்யைச் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சாதலற்ற வழியினை தேறும். 

கண்டம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சந்ததமும் நல்லமுதைப் பாடும் - கண்டம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்தியுடன் என்றும் உறவாடும். 

தோள், சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
தாரணியும் மேலுலகுந் தாங்கும் - தோள் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்தி பெற்று மேருவென ஓங்கும். 

நெஞ்சம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்தியுற நித்தம் விரிவாகும் - நெஞ்சம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அதைத் 
தாக்க வரும் வாளொதுங்கிப் போகும். 

சிவ, சக்தி தனக்கே எமது வயிறு - அது 
சாம்பரையும் நல்லவுண வாகும் - சிவ 
சக்தி தனக்கே எமது வயிறு - அது 
சக்தி பெற உடலினைக் காக்கும். 

இடை, சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல 
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் - இடை 
சக்தி தனக்கே கருவியாக்கு - நின்றன் 
சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும். 

கால், சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சாடியெழு கடலையுந் தாவும் - கால் 
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது 
சஞ்சலமில் லாமலெங்கும் மேவும். 

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் - மனம் 
சக்தி தனக்கே கருவி யாக்கு - அதில் 
சாத்துவீகத் தன்மையங்னைச் சூடும். 

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்தங்யற்ற சங்ந்தனைகள் தீரும் - மனம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல் 
சாரும் நல்ல உறுதங்யும் சீரும். 

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்தி சக்தி சக்தியென்று பேசும் - மனம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல் 
சார்ந்தங்ருக்கும் நல்லுறவும் தேசும். 

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் - மனம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்தி சக்தி யென்று குதித் தாடும். 

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சக்தியினை எத்திசையும் சேர்க்கும் - மனம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும். 

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது 
சந்தமும் சக்திதனைச் சூழும் - மனம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - அதில் 
சாவுபெறும் தீவினையும் ஊழும். 

மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - எதைத் 
தான் விரும்பி னாலும்வந்து சாரும் - மனம் 
சக்தி தனக்கே உரிமையாக்கு - உடல் 
தன்னிலுயர் சக்திவந்து சேரும். 

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - இந்தத் 
தாரணியில் நூறுவய தாகும் - மனம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - உன்னைச் 
சாரவந்த நோயழிந்து போகும். 

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - தோள் 
சக்தி பெற்றுநல்ல தொழில்செய்யும் - மனம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - எங்கும் 
சக்தியருள் மாரிவந்து பெய்யும். 

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ 
சக்தி நடையாவும் நன்கு பழகும் - மனம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - முகம் 
சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும். 

மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - உயர் 
சாத்திரங்கள் யாவும் நன்குதெரியும் - மனம் 
சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல 
சத்திய விளக்கு நித்தம் எரியும். 

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - நல்ல 
தாளவகை சந்தவகை காட்டும் - சித்தம் 
சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில் 
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும். 

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அறு 
சக்தியை யெல்லோர்க்கு முணர் வுறுத்தும் - சித்தம் 
சக்தி தனக்கே உரிமை யாக்கு 
சக்திபுகழ் திக்கனைக்கும் நிறுத்தும். 

மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது 
சக்தி சக்தி என்று குழலூதும் - சித்தம் 
சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில் 
சார்வதில்லை அச்சமுடன் சூதும். 

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது 
சக்தி யென்று வீணைதனில் பேசும் - சித்தம் 
சக்தி தனக்கே உரிமையாக்கு - அது 
சக்திபரி மளமிங்கு வீசும். 

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது 
சக்தி யென்று தாளமிட்டு முழக்கும் - சித்தம் 
சக்தி தனக்கே உரிமையாக்கு - அது 
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும். 

சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது 
சக்திவந்து கோட்டை கட்டி வாழும் - சித்தம் 
சக்தி தனக்கே உரிமையாக்கு - அது 
சக்தியருட் சித்திரத்தில் ஆழும். 

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் - மதி 
சக்தி தனக்கே உடைமையாக்கு - அங்கு 
சத்தியமும் நல்லறமும் கிடைக்கும். 

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
சாரவருந் தீமைகளை விலக்கும் - மதி 
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும். 

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் - மதி 
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
சக்தியுறை விடங்களை நாடும். 

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீக்கும் - மதி 
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் 
தள்ளிவிடும் பொய்ந்நெறியும் தீங்கும். 

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் 
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் - மதி 
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் 
சக்தியொளி நித்தமுநின் றிலகும். 

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் 
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு - மதி 
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் 
தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு. 

மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
தாரணியில் அன்புநிலை நாட்டும் - மதி 
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
சர்வசிவ சக்தியினைக் காட்டும். 

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது 
சக்திதிரு வருளினைச் சேர்க்கும் - மதி 
சக்தி தனக்கே அடிமையாக்கு - அது 
தாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும். 

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது 
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் - மதி 
சக்தி தனக்கே அடிமையாக்கு - அது 
தாக்கவரும் பொய்ப்புலியை ஓட்டும். 

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது 
சத்தியநல் லிரவியைக் காட்டும் - மதி 
சக்தி தனக்கே அடிமையாக்கு - அதில் 
சாரவரும் புயல்களை வாட்டும். 

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது 
சக்திவிர தத்தை யென்றும் பூணும் - மதி 
சக்தி விரதத்தை யென்றுங் காத்தால் - சிவ 
சக்திதரும் இன்பமும்நல் லூணும். 

மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - தெளி 
தந்தமுதம் பொய்கையென ஒளிரும் - மதி 
சக்தி தனக்கே அடிமையாக்கு - அது 
சந்ததமும் இன்பமுற மிளிரும். 

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
தன்னையொரு சக்தியென்று தேரும் - அகம் 
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
தாமதமும் ஆணவமும் தீரும். 

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
தன்னையவள் கோயிலென்று காணும் - அகம் 
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும். 

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
சக்தியெனும் கடலிலோர் திவலை - அகம் 
சக்தி தனக்கே உடைமையாக்கு - சிவ 
சக்தி யுண்டு நமக்கில்லை கவலை. 

அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் 
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் - அகம் 
சக்தி தனக்கே உடைமையாக்கு - அது 
சக்தி திரு மேனியொளி ஜ்வலிக்கும். 

சிவ, சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ 
சக்திசக்தி யென்று குதித்தாடு - சிவ 
சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ 
சக்திசக்தி என்றுவிளை யாடு.