இறைவா!இறைவா!

இறைவா!இறைவா!

bookmark

பல்லவி 

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள் 
இறைவா! இறைவா! இறைவா! (ஓ - எத்தனை) 

சரணங்கள் 

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு 
  சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய். 
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய 
  மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை) 

முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு 
  முழுதினையு முணரும் உணர் வமைத்தாய் 
பக்தியென் றொரு நிலை வகுத்தாய் - எங்கள 
  பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)