காளிக்குச்சமர்ப்பணம்

காளிக்குச்சமர்ப்பணம்

bookmark

இந்த மெய்யும் கரணமும் பொறியும் 
இருபத் தேழு வருடங்கள் காத்தனன், 
வந்தனம், அடி பேரருள் அன்னாய், 
வைர வீ! திறற் சாமுண்டி! காளி! 

சிந்த னைதெளிந் தேனினி யுன்றன் 
திருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன் 
வந்தி ருந்து பலபய னாகும் 
வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ!