மிதிலைக் காட்சிப் படலம் - 659
659.
‘’நிற்கு இது தகுவது அன்றால்.
நீடு அருஞ் சுரபிதன்னை
எற்கு அருள்’’ என்றலோடும்.
இயம்பலன் யாதும்; பின்னர்
‘’வற்கலை உடையென் யானோ
வழங்கலென்; வருவதுஆகின்.
கொற் கொள்வேல் உழவ!நீயே
கொண்டு அகல்க!’’ என்று கூற.
நிற்கு-உனக்கு; இது - இப் பசு; தகுவது அன்று - தகுதியுடையது
அன்று; ஆல் - (அதனால்); நீடு அரும் - சிறப்பு மிக்க; சுரபி
தன்னை - இக் காமதேனுவை; எற்கு அருள் - எனக்குக
கொடுத்தருளுக; என்றலோடும் - (என்று கௌசிகன்) சொன்ன
அளவில்; யாதும் இயம்பலம் - வசிட்டன் (சிறிது நேரம்) ஒன்றும்
கூறாதவனாய்; பின்னர் - பின்பு; கொன் கொள் - (பகைவர்க்கு)
அம்சம்தரும்; வேல் உழவ - வேற்படையுள்ள அரசே; வற்கலை
உடையென் - மரவுரியை ஆடையாக உடைய முனிவனான; யானோ
வழங்கலென் - நானோ (இதனை உமக்குக்) கொடுக்கும் உரிமை
உடையவன் அல்லன்; வருவது ஆகின் - (அப் பசு உம்மிடம்)
வருவதனால்; நீயே கொண்டு - நீரே அழைத்துக் கொண்டு; அகல்க
- செல்வீராக; என்று கூற - என்று கூறிய அளவில்.
வற்கலை உடையென் யானோ வழங்கலென் - முனிவர்க்கு அரசர்
பசு முதலிய பொருள்களைக் கொடுத்திடுவது மரபேயொழிய முனிவர்
அரசர்க்குக் கோதானம் செய்வது தக்கது அன்று என்ற கருத்தும்
குறிப்பாக உணரப்படுகிறது. சொல் கொள்வேல் - கொலைத்
தொழிலைக் கொண்ட வேல். கொல்லனது உலைக் களத்தில்
வடிக்கப்பட்ட வேல். வேல் உழவன்: பகைவரது உடம்பாகிய
விளைநிலத்தைத் தனது வேலாகிய கலப்பையைக் கொண்டு உழுது
போராகிய பயிரை வளர்த்து வெற்றியாகிய பயனை விளை விப்பவன்.
கொன்: அச்சம் (தொல் இடை -6) யானோ: ஒ-இழிவு
சிறப்பு. உருவக அணி. 96
