நாஞ்சில் நாடன்
வாழ்க்கை வரலாறு நாஞ்சில் நாடன் கன்னியாகுமரி மாவட்டம், வீர நாராயண மங்கலம் என்ற ஊரில் 31, டிசம்பர் 1947-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர் ஆவார். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம் ஆகும். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். இவரது முதல் நாவல் தலைகீழ்விகிதங்கள் ஆகும்.இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை ஆகும். தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.2010-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. கனடாவின் இலக்கியத்தோட்டத்தின் 2012-ஆம் ஆண்டுக்கான இயல்விருது தொராண்டோவில் இவருக்கு அளிக்கப்பட்டது.
