மிதிலைக் காட்சிப் படலம் - 642
642.
நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக் கதிர்
தாக்க. வெந்து தளர்ந்து சரிந்தனள்;
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரைப்
பூக்கள் பட்டது அப் பூவையும் பட்டனள்.
நிக்கமின்றி - நீங்குதல் இல்லாமல்; நிமிர்ந்த - (எங்கும்) பரவிய;
நிலாக்கதிர் - கந்திரனின் ஒளிக்கதிர்; தாக்க - தாக்குவதால்; வெந்து
- (சீதை) உடல் வெதும்பி; தளர்ந்து - (மனம்) தளர்ந்து; சரிந்தனள் -
கீழே விழுந்தாள்; சேக்கை ஆகி - (முன்பு அவளுக்கு) தங்கும்
இடமாகி; மலர்ந்த - விரிந்த; செந்தாமரைப் பூக்கள் - செந்தாமரை
மலர்கள் (இரவில் அச்சீதைக்குப் படுக்கை மெத்தையாய்); பட்டது -
அவள் புரண்டபோது அவளது காமச் சூட்டினால் அடைந்த
நிலைமகளை; அப் பூவையும் - அச் சீதையும்; பட்டனள் -
அடையலானாள்;
முன்பு சீதைக்குத் தங்கும் இடமாகி மலர்ந்த செந்தாமரை
இப்பொழுது பள்ளியணையாய்க் காமவேதனையால் புரண்டபோது
துன்பம் தந்தது என்க. தாமரைப் பூக்கள் பட்ட தன்மை: கூம்பிச்
சாம்பிப் பொலிவிழந்து வாடி ஒடுங்கியமை. பூவை: உவமையாகுபெயர்.
79
