மிதிலைக் காட்சிப் படலம் - 649
சதானந்தன் முகமன் கூறுதல்
649.
கோதமன் தரு கோ முனி கோசிக
மாதவன்தனை மா முகம் நோக்கி. ‘இப்
போது நீ இவண் போத. இப் பூதலம்
ஏது செய்த தவம்?’ என்று இய்மபினான்.*
கோதமன் தரு - கௌதம முனிவன் பெற்று அருளிய; கோ முனி
- முனிவர் தலைவனான சதானந்தன் மாதவன் கோசிகன் தனை -
பெருந் தவத்தையுடைய கௌசிக முனிவனது மாமுகம் நோக்கி -
திருமுகத்தைப் பார்த்து இப்போது நீ இவண் - இப்பொழுது நீங்கள்
இவ்விடம் போத - வருமாறு இப் பூதலம் - இந்த மிதிலை நகரம்;
செய்த தவம் - பண்ணிய தவம்; ஏது - யாதோ; என்று
இயம்பினான்- என்று உபசார மொழிகளைக் கூறலானான். 86
