மிதிலைக் காட்சிப் படலம் - 650
விசுவாமித்திரன் கூறுதல்
விசுவாமித்திரன் இராமனது பெருமை பேசுதல்
650.
பூந் தண் சேக்கைப் புனிதனையே பொரு
ஏய்ந்த கேண்மைச் சதானந்தன் என்று உரை
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி. நூல்
தோய்ந்த சிந்தைக் கௌசிகன் சொல்லுவான்:*
தண் பூச் சேக்கை- குளிர்ந்த தாமரை ஆசனத்தையுடைய;
புனிதனையே - தூய குணமுள்ள பிரமனை; பொரு ஏய்ந்த -
ஒத்துள்ளவனும்; கேண்மை - எல்லரிடத்திலும் நட்புடையவனுமான;
சதானந்தன் என்று உரை - சதானந்தன் என்று சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற; வாய்ந்த மா தவன் - பெருமுனிவனது; மாமுகம்
நோக்கி - சிறந்த திருமுகத்தைப் பார்த்து; நூல் தோய்ந்த -
கலைகளிலே ஆழ்ந்த; சிந்தையின் கௌசிகன் - மனத்தையுடைய
விசுவாமித்திரன்; சொல்லுவான் - (பின் வருமாறு) சொல்ல
முற்படுவான்.
முனிவனுக்குப் பிரமன் உவமை. 1. வேதம் ஓதுவதில் 2.
நல்லொழுக்கத்தில். 3. பெருந்தவமுடைமையில். 4. பிராமணர்க்குத்
தலைம பூணுவதில். சதானந்தன்: மிகுதியான ஆனந்தத்தை
உடையவன். நூல் தோய்ந்த சிந்தை: அனைத்துக் கலைகளையும்
முழுவதும் உணர்ந்த மனம். 87
