மிதிலைக் காட்சிப் படலம் - 652
சதானந்தர் கோசிகனைப் பாராட்டுதல்
652.
என்று கோசிகன். கூறிட. ஈறு இலா
வன் தபோதனன். ‘மா தவ! நின் அருள்
இன்றுதான் உளதேல். அரிது யாது. இந்த
வென்றி வீரர்க்கு?’ எனவும் விளம்பி. மேல்.
என்று கோசிகன் கூறிட - என்று விசுவாமித்திரன் சொன்ன
அளவில்; ஈறு இலா - எல்லையற்ற; வன் தபோதனன் -
கடுந்தவத்தையுடையவனான சதானந்த முனிவன்; மாதவ -
(விசுவாமித்திரனை நோக்கி) மிக்க தவமுடையவரே; நின் அருள் -
உமது கருணை; இன்று உளதேல் - (இக்குமரர்களிடம்) இப்பொழுது
இருப்பதனால்; இந்த வென்றி வீரர்க்கு - வெற்றி வீரராகிய இந்த
இராமலக்குவர்க்கு; அரிது - செய்யமுடியாத அருஞ்செயல்; யாது -
என்ன இருக்கின்றது (ஒன்றுமில்லை); எனவும் விளம்பி
- என்றும் கூறி; மேல் - மேலும்;
தபோதனன்: யாவரும் செல்வத்தை விரும்பிப் பாதுகாப்பது போலத்
தன் தவத்தை விரும்பிப் பாதுகாக்கும் முனிவன். 89
