மிதிலைக் காட்சிப் படலம் - 653
சதானந்தர் இராமபிரானை நோக்கி விசுவாமித்திரர்
வரலாறு கூறுதல்
இராமனுக்குச் சதானந்தர் உரைத்த விசுவாமித்திரர் வரலாறு.
653.
எள் இல் பூவையும். இந்திர நீலமும்.
அள்ளல் வேலையும். அம்புத சாலமும்.
விள்ளும் வீயுடைப் பானலும். மேவும் மெய்
வள்ளல்தன்னை மதிமுகம் நோக்கியே.*
எள் இல் பூவையும் - பழிப்பதற்கு இடமில்லாத காயாமலரையும்;
இந்திர நீலமும் - இந்திர நீல இரத்தினத்தையும்; அள்ளல்
வேலையும் - சேறுள்ள கடலையும்; அம்புத சாலமும் - மேகக்
கூட்டத்தையும்; விள்ளும் வீ உடை - மலர்ந்த பூக்களைக் கொண்ட;
பானலும் - நீலோற்பலத்தையும்; மேவும் - உவமையாகப் பொருந்திய;
மெய் - திருமேனியுடைய; வள்ளல்தன்னை - இராமனது; மதிமுகம்
நோக்கி - சந்திரன் போன்ற திருமுகத்தைப் பார்த்து. 90
