மிதிலைக் காட்சிப் படலம் - 654
விசுவாமித்திரன் வரலாறு (654-700)
அரசாளுகை
விசுவாமித்திரன் அரசனாய் ஆண்டமை
654.
‘நறு மலர்த் தொடை நாயக! நான் உனக்கு
அறிவுறுத்துவென். கேள்; இவ் அருந் தவன்
இறை எனப் புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம்
முறையினின் புரந்தே அருள் முற்றினான்.
நறுமலர்த் தொடை- மணமுள்ள மலர்களால் ஆகிய மாலையை
அணிந்த; நாயக - தலைவனே! நான் உனக்கு - உனக்கு நான்;
அறிவுறுத்துவென் - (ஒரு செய்தியை) தெரிவிக்கிறேன்; கேள் -
(அதனை) கேட்பாயாக!; இவ் அருந்தவன் -இந்த அரிய
தவமுனிவனான கௌசிகன்; புவிக்கு இறையென - (முதலில்)
நிலவுலகத்திற்கு ஓர் அரசனாகி; ஈறு இல் - எல்லையில்லாத; பல்
ஆண்டு எலாம் - பல ஆண்டுகள் அளவும்; முறையினின் புரந்து -
அரச நீதிப்படி பாதுகாத்து; அருள் முற்றினான் - (உயிர்களிடம்)
கருணை நிரம்பி இருந்தான். 91
