வள்ளிப்பாட்டு - 2

வள்ளிப்பாட்டு - 2

bookmark


ராகம் -கரஹரப்ரியை தாளம்-ஆதி 

பல்லவி 

உனையே மயல் கொண்டேன் -வள்ளீ! 
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்! (உனையே) 

சரணம் 

எனை யாள்வாய், வள்ளீ! வள்ளீ 
இளமயி லே! என் இதயமலர் வாழ்வே! 
கனியே! சுவையுறு தேனே 
கலவியி லேஅமு தனையாய், - (கலவியிலே) 
தனியே, ஞான விழியாய்! - நிலவினில் 
நினமருவி, வள்ளீ, வள்ளீ! 
நீயா கிடவே வந்தேன். (உனையே)